'நிதி மோசடி நிறுவனம் குறித்து புகார் அளிக்கலாம்..!' - பொருளாதார குற்றபிரிவு போலீசார் அறிவுரை

கோவையில் நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என மாநகர பொருளாதார குற்றபிரிவு போலீசார் அறிவுறுத்தல்.


கோவை: கோவையில் செயல்பட்டு வந்த டீரிம் மேக்கர்ஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணத்தை கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என மாநகர பொருளாதார குற்றபிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை சாய்பாபாகாலனி ராமலிங்கம் நகர், பகுதியில் செயல்பட்டு வந்த டீரிம் மேக்கர்ஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் பொதுமக்களிடமிருந்து முதலீட்டை பெற்று இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி, இதுவரை 50,000-த்திற்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து பல கோடி மோசடி செய்ததாக கோவைப் பொருளாதார குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

எனவே மேற்கண்ட நிறுவனத்தில் முதலீடு செய்து தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நபர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பொருளாதார குற்றப்பிரிவை அணுகித் தகுந்த ஆவணங்களுடன் புகார் செய்து கொள்ளும் பட்சத்தில் விரைவில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...