'நிதி மோசடி நிறுவனம் குறித்து புகார் அளிக்கலாம்..!' - பொருளாதார குற்றபிரிவு போலீசார் அறிவுரை

கோவையில் நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என மாநகர பொருளாதார குற்றபிரிவு போலீசார் அறிவுறுத்தல்.


கோவை: கோவையில் செயல்பட்டு வந்த டீரிம் மேக்கர்ஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணத்தை கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என மாநகர பொருளாதார குற்றபிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை சாய்பாபாகாலனி ராமலிங்கம் நகர், பகுதியில் செயல்பட்டு வந்த டீரிம் மேக்கர்ஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் பொதுமக்களிடமிருந்து முதலீட்டை பெற்று இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி, இதுவரை 50,000-த்திற்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து பல கோடி மோசடி செய்ததாக கோவைப் பொருளாதார குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

எனவே மேற்கண்ட நிறுவனத்தில் முதலீடு செய்து தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நபர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பொருளாதார குற்றப்பிரிவை அணுகித் தகுந்த ஆவணங்களுடன் புகார் செய்து கொள்ளும் பட்சத்தில் விரைவில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...