தமிழகத்தில் பன்றிகாய்ச்சல் நோய்த்தடுப்புக்கான மருந்துக்கள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் தகவல்


தமிழகத்தில் பன்றி காய்ச்சல் நோய்க்கான அனைத்து தடுப்பு மருந்துக்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.



கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான நோய்த்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குநர் குழந்தைசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது இதனை தெரிவித்தார். பன்றிக்காய்ச்சலுக்கான டாமிபுளூ மாத்திரைகள் போதுமான அளவில் அரசு மருத்துவமனையிலும், சுகாதார நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தனியார் மருத்துவமனைகளிலும் இந்த மாத்திரைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 



மேலும் மக்களிடையே நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு தொடர்ந்து நடத்தி வருவதாகவும் சோப் மூலம் கைகளை நாளொன்றிற்கு குறைந்த பட்சம் 12 முறைகளாக கழுவ வேண்டும் என்பதை மாணவர்களிடம் அறிவுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். ரூபெல்லா மற்றும் தட்டமைக்கான தடுப்பூசிகள் போடும் பணி அனைத்து மாநிலங்களிலும் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...