தமிழகத்தில் பன்றிகாய்ச்சல் நோய்த்தடுப்புக்கான மருந்துக்கள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் தகவல்


தமிழகத்தில் பன்றி காய்ச்சல் நோய்க்கான அனைத்து தடுப்பு மருந்துக்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.



கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான நோய்த்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குநர் குழந்தைசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது இதனை தெரிவித்தார். பன்றிக்காய்ச்சலுக்கான டாமிபுளூ மாத்திரைகள் போதுமான அளவில் அரசு மருத்துவமனையிலும், சுகாதார நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தனியார் மருத்துவமனைகளிலும் இந்த மாத்திரைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 



மேலும் மக்களிடையே நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு தொடர்ந்து நடத்தி வருவதாகவும் சோப் மூலம் கைகளை நாளொன்றிற்கு குறைந்த பட்சம் 12 முறைகளாக கழுவ வேண்டும் என்பதை மாணவர்களிடம் அறிவுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். ரூபெல்லா மற்றும் தட்டமைக்கான தடுப்பூசிகள் போடும் பணி அனைத்து மாநிலங்களிலும் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...