வாள் கேடயத்தை 3 மணிநேரம் சுழற்றி உலக சாதனை - கோவை மாணவிக்கு குவியும் பாராட்டு!

கோவையில் நான்காம் வகுப்பு பள்ளி மாணவி இரண்டரை கிலோ எடை கொண்ட வாள் கேடயத்தை தொடர்ந்து 3மணி நேரம் சுழற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.



கோவை: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு கலைகளில் வாள் கேடய வீச்சு முக்கிய விளையாட்டாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் விதமாக கோவையில் தொடர்ந்து சிறுவர், சிறுமிகள் தமிழ் பாரம்பரிய கலைகளில் உலக சாதனை புரிந்து வருகின்றனர்.



இதன் தொடர்ச்சியாக, கோவையை சேர்ந்த கார்த்திக்-லாவண்யா தம்பதியரின் மகள் சஞ்சவி. 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சஞ்சவி, வீரக்கலையான இரண்டரை கிலோ எடை கொண்ட வாள் கேடயத்தை தொடர்ந்து 3 மணிநேரம் 9 நிமிடங்கள் 5 விநாடிகள் சுழற்றி இந்தியா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.



வீரத்திலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் செய்த சஞ்சவியின் இந்த சாதனையை இந்தியா, அமெரிக்கன் மற்றும் யுரோப்பியன் என மூன்று உலக சாதனை புத்தகங்கள் அங்கீகரித்து சஞ்சவிக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...