மேட்டுப்பாளையத்தில் குப்பை அள்ளும் வாகனத்தில் வந்த அரசுக் கோப்புகள் - வைரல் வீடியோ

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே குடியரசு தினத்தன்று சிக்கதாசம்பாளையம் கிராம சபை கூட்டத்திற்காக, ஊராட்சி அலுவலகத்தில் இருந்த அரசுக் கோப்புகளை குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டுவந்த வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிக்கதாம்பாளையம் கிராமத்தில் குடியரசு தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டம் வெள்ளிப்பாளையம் கிராமத்தில் நடந்தது.



இதற்காக பொதுமக்கள் அங்கு கூடியிருந்த நிலையில், ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட வேண்டிய ஆவணங்களை குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டுவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிகழ்வை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கிராம சபா கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விபர மற்றும் பஞ்சாயத்து அலுவலக கோப்புகளை முக்கியமாக கருதாமல், ஒரு குப்பை என்ற எண்ணத்தில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் இந்தச் செயலில் ஈடுபட்டார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



மேலும், கிராம சபை கூட்டத்திற்கு காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் வராத நிலையில், வேறு வாகனங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் குப்பை அள்ளும் வாகனத்தில் பஞ்சாயத்து பதிவேடுகள் மற்றும் கோப்புகளை எடுத்து வந்ததாக ஊராட்சி அலுவலகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஏற்கனவே சிக்கதாசம்பாளையம் பஞ்சாயத்து அலுவலக செயல்பாடுகள் குறித்து மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவரும் நிலையில், கிராமசபா கூட்ட தினத்தன்று மக்கள் பார்வைக்கு வைக்க கோப்புகளை ஊராட்சி நிர்வாகத்தினர் அலட்சியமாக கையாண்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு கோப்புகளை பொறுப்பற்ற முறையில் இப்படி குப்பை வண்டியில் கொண்டுவந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...