மேட்டுப்பாளையம் அருகே மசூதியில் வழிபாடு நடத்துவதில் தகராறு - இருவர் காயம்

மேட்டுப்பாளையம் அருகே பழமையான பெள்ளாதி தர்க்காவில் வழிபாடு நடத்துவதில் சுன்னத் ஜமாத் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் கட்டையால் தாக்கிக் கொண்டதில் இருவர் காயம்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதியில் பழமையான தர்காவில் இருதரப்பினர் இடையே வழிபாடு நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் இருவர் காயமடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதியில் மிக பழமையான தர்கா உள்ளது.இந்த தர்காவை சுன்னத் ஜமாத் அமைப்பினர் நிர்வகித்து வரும் நிலையில், இந்த தர்காவில் தொழுகை நடத்த ஜக்கிய ஜமாஅத் அமைப்பினர் மற்றும் சுன்னத் ஜமாத் அமைப்பினர் இடையே இன்று பிரச்னை ஏற்பட்டு உள்ளது.

ஜக்கிய ஜமாஅத் பிரிவினர் தொழுகை நடத்த வந்த போது, மற்றொரு தரப்பான சுன்னத் ஜமாத் அமைப்பினர் கதவை மூடியதால் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் பிரச்னை முற்றிக் கைகலப்பாக மாறி, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.



இதில் தவ்ஹீத் ஜமாஅத் சேர்ந்த முகமது இஸ்மாயில், நசீர் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இது சம்பந்தமாக காரமடை போலீசார் வழக்குப் பதிவு செய்து சுன்னத் ஜமாத் அமைப்பினர் மூன்று பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மசூதியில் வழிபாடு மேற்கொள்ள இரு தரப்பினரும் மோதி கொண்ட சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...