துடியலூர் அருகே தனியார் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

துடியலூர் அருகே வி.எஸ்.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற 74வது குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக துடியலூர் காவல் பயிற்சி உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி பங்கேற்பு.


கோவை: வி.எஸ்.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 74வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.



சுதந்திர இந்தியாவின் 74வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அருகே வி.எஸ்.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் குடியரசு தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் சுபாஸ் சந்திரபோஸ், வேலுநாச்சியார், பாரதியார், ஜவர்கலால் நேரு, திருப்பூர் குமரன் உள்ளிட்ட தேசத் தலைவர்கள் போன்றும் கல்பனா சாவ்லா, ரோபோட் போன்றும் வேடம் அணிந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துடியலூர் காவல் பயிற்சி உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி மாணவ மாணவிகளிடம் உரையாற்றினார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...