பனிக்காலத்தில் விமானங்களை இயக்குவதில் ஏற்படும் சிரமங்கள் என்ன? - மூத்த விமானி பகத்சிங் தகவல்!

பனிக்காலத்தில் விமானங்கள் புறப்பாடு மற்றும் தரையிறங்கும் நிகழ்வுகளை விட தரையிறங்கிய பின் விமான நிறுத்துமிடம் வரை ஓட்டி செல்வதே மிகுந்த சவாலானது என விமானி பகத்சிங் தெரிவித்தார்.



கோவை: பனிக்காலத்தில் விமானங்கள் இயக்குவது குறித்து தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த விமானி பகத்சிங் கூறியதாவது:



இந்தியா மட்டுமின்றி உலகளவில் பனிக்காலத்தில் விமானங்களை இயக்குவதில் பல்வேறு சிரமங்களை விமானிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்றைய நவீன உலகில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் விமானத்துறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் டெல்லி, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் மிக அதிகளவில் இருக்கும். ஒவ்வொரு முறையும் விமானங்கள் புறப்படும் போதும் தரையிறங்கும் போதும் விமானிங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.



இருப்பினும் மிகுந்த சவால் என்பது விமானத்தை தரையிறக்கிய பின் ஓடுதளத்தில் இருந்து பத்திரமாக விமானம் நிறுத்துமிடம் வரை ஓட்டி செல்வதில் தான் உள்ளது.

பொதுவாக விமானம் புறப்படும் போதும், தரையிறங்கும் போதும் பிரத்யேக பயிற்சி பெற்ற ஊழியர்கள் விமானிகளுக்கு பல்வேறு சைகைகள் மூலம் உதவி செய்வார்கள். பனிக்காலங்களில் குறிப்பாக இந்தியாவின் வடமாநிலங்களில் இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.



விமானத்தின் அருகே அவர்கள் நின்ற போதும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக பணியை துரிதமாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

அதிக பனிமூட்டம் நிலவும் விமான நிலையங்களில் உதாரணமாக சாதாரண நாட்களில் ஒரு மணிநேரத்துக்கு 10 விமானங்களை இயக்கினால், பனிக்காலத்தில் அதே ஒரு மணிநேரத்தில் 2 விமானங்களை மட்டுமே இயக்க முடியும். அந்த அளவு நிலைமை படுமோசமாக இருக்கும்.

பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நடவடிக்கையும் மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்படும், என்றார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...