உடுமலையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் - முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

உடுமலையில் நடந்த மொழிப்போர் தியாகிகளின் நினைவாக வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினார்.



உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை வெங்கட கிருஷ்ணா ரோட்டில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளரான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.



கூட்டத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார்.

உடுமலை நகராட்சி பொன்விழா ஆண்டை முன்னிட்டு 50 கோடி நிதி ஒதுக்கினார். கால்நடை பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி அமைக்க 235 கோடி நிதி ஒதுக்கியது உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் உடுமலைக்கு அதிமுக அரசு செய்துள்ளது.

ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு பணிகளை மெத்தனமாக செய்து வருகிறது, என்றார்.



நிகழ்வில் உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், மாவட்ட சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...