உடுமலையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் - முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

உடுமலையில் நடந்த மொழிப்போர் தியாகிகளின் நினைவாக வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினார்.



உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை வெங்கட கிருஷ்ணா ரோட்டில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளரான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.



கூட்டத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார்.

உடுமலை நகராட்சி பொன்விழா ஆண்டை முன்னிட்டு 50 கோடி நிதி ஒதுக்கினார். கால்நடை பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி அமைக்க 235 கோடி நிதி ஒதுக்கியது உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் உடுமலைக்கு அதிமுக அரசு செய்துள்ளது.

ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு பணிகளை மெத்தனமாக செய்து வருகிறது, என்றார்.



நிகழ்வில் உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், மாவட்ட சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...