மருத்துவர்களை கண்டித்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளி தர்ணா

முறையான சிகிச்சை அளிக்காமல் வெளியேற்றிய மருத்துவர்களை கண்டித்து தாராபுரம் அரசு மருத்துவமனை நுழைவுவாயிலில் அமர்ந்து நோயாளி தர்ணா.



தாராபுரம்: தாராபுரம் அரசு மருத்துவமனை நுழைவுவாயிலில் அமர்ந்து நோயாளி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கருங்காலிவலசு ஏடி காலனியை சேர்ந்த தம்பதி துரைசாமி - சகுந்தலா. இவர்களது மகன் விக்னேஷ்(வயது 23) பி. எட். பட்டதாரியான இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தலையில் காயம் ஏற்பட்டதாக, தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள் பிரிவு நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த நான்கு நாட்களாக தாராபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஸ்கேன் எடுப்பதற்காக விக்னேஷிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு பிறகு மூன்று மணி நேரம் கழித்து விக்னேஷை டீச்சார்ஜ் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.



முறையாக சிகிச்சை அளிக்காமல் விக்னேஷை ஏமாற்றி கையெழுத்து பெற்று விட்டதாக கூறி முறையான மருத்துவர்களை கண்டித்து விக்னேஷ் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். முறையான சிகிச்சை அளிக்ககோரி கோஷங்களை எழுப்பினர்.



இவர்களிடம் தாராபுரம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...