மருத்துவர்களை கண்டித்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளி தர்ணா

முறையான சிகிச்சை அளிக்காமல் வெளியேற்றிய மருத்துவர்களை கண்டித்து தாராபுரம் அரசு மருத்துவமனை நுழைவுவாயிலில் அமர்ந்து நோயாளி தர்ணா.



தாராபுரம்: தாராபுரம் அரசு மருத்துவமனை நுழைவுவாயிலில் அமர்ந்து நோயாளி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கருங்காலிவலசு ஏடி காலனியை சேர்ந்த தம்பதி துரைசாமி - சகுந்தலா. இவர்களது மகன் விக்னேஷ்(வயது 23) பி. எட். பட்டதாரியான இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தலையில் காயம் ஏற்பட்டதாக, தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள் பிரிவு நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த நான்கு நாட்களாக தாராபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஸ்கேன் எடுப்பதற்காக விக்னேஷிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு பிறகு மூன்று மணி நேரம் கழித்து விக்னேஷை டீச்சார்ஜ் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.



முறையாக சிகிச்சை அளிக்காமல் விக்னேஷை ஏமாற்றி கையெழுத்து பெற்று விட்டதாக கூறி முறையான மருத்துவர்களை கண்டித்து விக்னேஷ் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். முறையான சிகிச்சை அளிக்ககோரி கோஷங்களை எழுப்பினர்.



இவர்களிடம் தாராபுரம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...