மருத்துவர்களை கண்டித்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளி தர்ணா

முறையான சிகிச்சை அளிக்காமல் வெளியேற்றிய மருத்துவர்களை கண்டித்து தாராபுரம் அரசு மருத்துவமனை நுழைவுவாயிலில் அமர்ந்து நோயாளி தர்ணா.



தாராபுரம்: தாராபுரம் அரசு மருத்துவமனை நுழைவுவாயிலில் அமர்ந்து நோயாளி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கருங்காலிவலசு ஏடி காலனியை சேர்ந்த தம்பதி துரைசாமி - சகுந்தலா. இவர்களது மகன் விக்னேஷ்(வயது 23) பி. எட். பட்டதாரியான இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தலையில் காயம் ஏற்பட்டதாக, தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள் பிரிவு நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த நான்கு நாட்களாக தாராபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஸ்கேன் எடுப்பதற்காக விக்னேஷிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு பிறகு மூன்று மணி நேரம் கழித்து விக்னேஷை டீச்சார்ஜ் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.



முறையாக சிகிச்சை அளிக்காமல் விக்னேஷை ஏமாற்றி கையெழுத்து பெற்று விட்டதாக கூறி முறையான மருத்துவர்களை கண்டித்து விக்னேஷ் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். முறையான சிகிச்சை அளிக்ககோரி கோஷங்களை எழுப்பினர்.



இவர்களிடம் தாராபுரம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...