உடுமலை அருகே நாட்டு துப்பாக்கி பறிமுதல் - 4பேர் கைது

உடுமலை அருகேயுள்ள சாம ராயபட்டி பெருமாள்புதூர் பிரிவு அருகே நாட்டு துப்பாக்கியுடன் பைக்கில் வந்த 3பேரை போலீசார் பிடித்து அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல்.


திருப்பூர்: சாம ராயபட்டி பெருமாள்புதூர் பிரிவு அருகே போலீசார் வாகன சோதனையின் போது நாட்டுத்துப்பாக்கியுடன் பைக்கில் வந்த 3பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள சாமராயபட்டி பெருமாள்புதூர் பிரிவு அருகே 3 பேர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த குமரலிங்கம் போலீசார் அவர்களை நிறுத்தி விசாரணை ‌நடத்தினர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதைத்தொடர்ந்து பைக்கை சோதனை செய்ததில், நாட்டு துப்பாக்கி, 3 தோட்டாக்கள், இரண்டு டார்ச் லைட்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் துப்பாக்கி மற்றும் தோட்டக்களை கோவை சதீஷ் என்பவரிடம் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக ரூ.14ஆயிரம் கொடுத்து வாங்கியது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து சாமராய பட்டியைச் சேர்ந்த துரைவேல் (39), சிவசக்தி (20), மாசாணி முத்து (23), கோவை சதீஷ் என்கிற கோபால கிருஷ்ணன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...