உடுமலை அருகே நாட்டு துப்பாக்கி பறிமுதல் - 4பேர் கைது

உடுமலை அருகேயுள்ள சாம ராயபட்டி பெருமாள்புதூர் பிரிவு அருகே நாட்டு துப்பாக்கியுடன் பைக்கில் வந்த 3பேரை போலீசார் பிடித்து அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல்.


திருப்பூர்: சாம ராயபட்டி பெருமாள்புதூர் பிரிவு அருகே போலீசார் வாகன சோதனையின் போது நாட்டுத்துப்பாக்கியுடன் பைக்கில் வந்த 3பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள சாமராயபட்டி பெருமாள்புதூர் பிரிவு அருகே 3 பேர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த குமரலிங்கம் போலீசார் அவர்களை நிறுத்தி விசாரணை ‌நடத்தினர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதைத்தொடர்ந்து பைக்கை சோதனை செய்ததில், நாட்டு துப்பாக்கி, 3 தோட்டாக்கள், இரண்டு டார்ச் லைட்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் துப்பாக்கி மற்றும் தோட்டக்களை கோவை சதீஷ் என்பவரிடம் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக ரூ.14ஆயிரம் கொடுத்து வாங்கியது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து சாமராய பட்டியைச் சேர்ந்த துரைவேல் (39), சிவசக்தி (20), மாசாணி முத்து (23), கோவை சதீஷ் என்கிற கோபால கிருஷ்ணன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...