உடுமலை அருகே நாட்டு துப்பாக்கி பறிமுதல் - 4பேர் கைது

உடுமலை அருகேயுள்ள சாம ராயபட்டி பெருமாள்புதூர் பிரிவு அருகே நாட்டு துப்பாக்கியுடன் பைக்கில் வந்த 3பேரை போலீசார் பிடித்து அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல்.


திருப்பூர்: சாம ராயபட்டி பெருமாள்புதூர் பிரிவு அருகே போலீசார் வாகன சோதனையின் போது நாட்டுத்துப்பாக்கியுடன் பைக்கில் வந்த 3பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள சாமராயபட்டி பெருமாள்புதூர் பிரிவு அருகே 3 பேர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த குமரலிங்கம் போலீசார் அவர்களை நிறுத்தி விசாரணை ‌நடத்தினர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதைத்தொடர்ந்து பைக்கை சோதனை செய்ததில், நாட்டு துப்பாக்கி, 3 தோட்டாக்கள், இரண்டு டார்ச் லைட்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் துப்பாக்கி மற்றும் தோட்டக்களை கோவை சதீஷ் என்பவரிடம் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக ரூ.14ஆயிரம் கொடுத்து வாங்கியது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து சாமராய பட்டியைச் சேர்ந்த துரைவேல் (39), சிவசக்தி (20), மாசாணி முத்து (23), கோவை சதீஷ் என்கிற கோபால கிருஷ்ணன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...