திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர சோதனை

குடியரசு தின விழாவை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் மோப்பநாய்களைக் கொண்டு சோதனை. பயணிகளின் உடைமைகளைச் சோதனை செய்த பின்னரே அனுமதி.


திருப்பூர்: 74ஆவது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் பின்னலாடை நகரமாகத் திகழ்வதால் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் நாள்தோறும் திருப்பூருக்கு ரயில் மூலம் வருகின்றனர்.



எனவே குடியரசு தினத்தை ஒட்டி எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது, என்பதற்காக ரயில் நிலையத்தின் உள்ளே வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனை செய்து பின்னர் ரயில் நிலையம் உள்ளே அனுமதித்து வருகின்றனர்.



அதுமட்டுமின்றி ரயில் மூலம் திருப்பூர் வரும் பயணிகளையும் சோதனை செய்த பின்னரே வெளியே செல்ல அனுமதித்து வருகின்றனர். மேலும் ரயில் நிலையத்தில் மோப்பநாய்களைக் கொண்டு சோதனை நடத்தினர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மாணவர்களின் பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...