கோவையில் உயர் அழுத்த மின் கம்பி மீது மரம் உரசி விபத்து - மின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநர் பலி!

கோவை மதுக்கரை பாலத்துறை அருகே உயர் அழுத்த மின் கம்பி மீது மரம் உரசியதில் மின்சாரம் பாய்ந்து அருகே இருந்த மினி ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது42). இவர் அப்பகுதியில் மினி ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த ஹரிதாஸ், வீட்டின் வெளியே உயரமாக வளர்ந்து இருந்த முருங்கை மரத்தின் கிளைகளை வெட்டியதாக தெரிகிறது. அப்போது, வெட்டப்பட்ட கிளை முறிந்து அருகே இருந்த உயர் அழுத்த மின்கம்பி மீது விழுந்தது.



இதில், மரக்கிளை வழியே மின்சாரம் பாய்ந்ததில், ஹரிதாஸ் தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக, மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, அப்பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக குறுகிய உயரத்திலேயே உயர் அழுத்த மின் கம்பிகள் செல்வதால், ஆபத்து அதிகமாக இருப்பதாக கூறிய அப்பகுதி மக்கள், தற்போது மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

எனவே, அப்பகுதியில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை உயரமான கம்பங்கள் மூலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஹரிதாஸ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...