காரமடை நகராட்சியில் குப்பை அள்ளுவதற்கான ஒப்பந்த தீர்மானம் நிறுத்தி வைப்பு

கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் குப்பைகள் அள்ளும் விவகாரத்தில் தனியார் நிறுவனத்திற்குச் சாதகமான ஒப்பந்த தீர்மானம் நிறுத்தி வைப்பு.


கோவை: காரமடை நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அவசர கூட்டத்தில் துப்புரவுப் பணியாளர்களின் வேலைவாய்ப்பினை பறிக்கும் வகையில் குப்பைகளைச் சேகரிக்கத் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட அனுமதிக் கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் காரமடை நகராட்சியின் அவசரக்கூட்டம் நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த அவசர கூட்டத்தில் ஒரே ஒரு தீர்மானம் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.

இதில் நகராட்சியில் உள்ள குப்பைகளைச் சேகரிக்க தற்போது 120 தற்காலிக பணியாளர்களும், 30 நிரந்தர பணியாளர்கள் உள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் காரமடை நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குப்பைகளைச் சேகரிக்கத் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட அனுமதி கோரப்பட்டது.



இதனால் ஏற்கனவே பணியில் உள்ளத் துப்புரவுப் பணியாளர்களின் பணி பாதிக்கப்படுவதுடன் கொரானோ காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியற்றியவர்களுக்கே இந்த நிலையா? என அனைத்து கவுன்சிலர்களும், தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தீர்மானம் நிறுத்தி வைக்கபட்டுவதாக நகராட்சி தலைவர் உஷா அறிவித்தார்.

இதனையடுத்து துப்புரவுத் தொழிலாளர்களைச் சந்தித்த நகராட்சி தலைவர் உஷா, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...