நீலகிரி கூடலூரில் தேயிலைத் தோட்டத்திற்கு புகுந்த காட்டுயானைக் கூட்டம் - தொழிலாளர்கள் பீதி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் திடீரென காட்டு யானைக் கூட்டம் புகுந்ததால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். யானைக் கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் நாளுக்கு நாள் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, ஒற்றை ஆண் காட்டு யானைகளும், மக்னா யானைகளும் தேயிலை தோட்டங்களில் அவ்வப்போது புகுந்து தொழிலாளர்களை தாக்கி, அச்சுறுத்தி வருகின்றன.



இந்த நிலையில், இன்று காலை தேவர் சோலை பகுதியில் உள்ள 3 டிவிஷன் தேயிலை தோட்டத்திற்குள் காட்டு யானை கூட்டம் ஒன்று புகுந்தது. அதனை கண்டு அச்சம் அடைந்த தொழிலாளர்கள், இன்று பணிக்கு செல்லவில்லை.



இந்த நிலையில் தேயிலைத் தோட்டத்திற்குள் சுற்றித்திரியும் யானை கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



இருப்பினும், அந்த யானை கூட்டம் வனபகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து எஸ்டேட் பகுதியிலேயே சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...