நீலகிரி கூடலூரில் தேயிலைத் தோட்டத்திற்கு புகுந்த காட்டுயானைக் கூட்டம் - தொழிலாளர்கள் பீதி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் திடீரென காட்டு யானைக் கூட்டம் புகுந்ததால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். யானைக் கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் நாளுக்கு நாள் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, ஒற்றை ஆண் காட்டு யானைகளும், மக்னா யானைகளும் தேயிலை தோட்டங்களில் அவ்வப்போது புகுந்து தொழிலாளர்களை தாக்கி, அச்சுறுத்தி வருகின்றன.



இந்த நிலையில், இன்று காலை தேவர் சோலை பகுதியில் உள்ள 3 டிவிஷன் தேயிலை தோட்டத்திற்குள் காட்டு யானை கூட்டம் ஒன்று புகுந்தது. அதனை கண்டு அச்சம் அடைந்த தொழிலாளர்கள், இன்று பணிக்கு செல்லவில்லை.



இந்த நிலையில் தேயிலைத் தோட்டத்திற்குள் சுற்றித்திரியும் யானை கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



இருப்பினும், அந்த யானை கூட்டம் வனபகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து எஸ்டேட் பகுதியிலேயே சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...