நீலகிரி கூடலூரில் தேயிலைத் தோட்டத்திற்கு புகுந்த காட்டுயானைக் கூட்டம் - தொழிலாளர்கள் பீதி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் திடீரென காட்டு யானைக் கூட்டம் புகுந்ததால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். யானைக் கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் நாளுக்கு நாள் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, ஒற்றை ஆண் காட்டு யானைகளும், மக்னா யானைகளும் தேயிலை தோட்டங்களில் அவ்வப்போது புகுந்து தொழிலாளர்களை தாக்கி, அச்சுறுத்தி வருகின்றன.



இந்த நிலையில், இன்று காலை தேவர் சோலை பகுதியில் உள்ள 3 டிவிஷன் தேயிலை தோட்டத்திற்குள் காட்டு யானை கூட்டம் ஒன்று புகுந்தது. அதனை கண்டு அச்சம் அடைந்த தொழிலாளர்கள், இன்று பணிக்கு செல்லவில்லை.



இந்த நிலையில் தேயிலைத் தோட்டத்திற்குள் சுற்றித்திரியும் யானை கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



இருப்பினும், அந்த யானை கூட்டம் வனபகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து எஸ்டேட் பகுதியிலேயே சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...