திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


கோவை: கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஹனீபா என்பவரது மகன் ஹக்கிம் என்ற டோரிஹக்கிம்(வயது35) என்ற நபர் மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, மேட்டுப்பாளையம் போலீசார் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

அதன்படி, குற்றவாளி ஹக்கிம் என்ற டோரி ஹக்கிம்-க்கு 7ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதமாக விதித்து நீதிபதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில்ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் உள்ளிட்டோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...