கோவையில் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - போக்குவரத்து பாதிப்பு

கோவையில் மத்திய அரசின் தொழிலாளர் கொள்கையை எதிர்த்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: மத்திய அரசின் தொழிலாளர் கொள்கையை எதிர்த்தும், பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஏஐடியுசி சங்கத்தினர் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசின் தொழிலாளர் கொள்கையை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர். 240 நாட்கள் பணிபுரிந்தாலும் பணி நிரந்தரம், என்டிசி ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும், நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நிதி உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர்கள் அப்போது வலியுறுத்தினர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இதையடுத்து, அங்கிருந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, பேருந்துகளில் அழைத்துச் சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...