குட்டியுடன் புகுந்த காட்டு யானைகள் - 'போ ராஜா போ' என்று பாசத்துடன் விரட்டியடித்த கோவை கிராம மக்கள்..!

கோவை தொண்டாமுத்தூர் தாளியூர் அருகே கிராமத்திற்குள் குட்டியுடன் புகுந்த காட்டு யானைகளை கிராம மக்கள் அன்பான வார்த்தைகளால் கூறி விரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தாளியூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில், இன்று அதிகாலையில் குட்டியுடன் ஐந்து காட்டு யானைகள் புகுந்தன. அங்கிருந்த சாலையை அவை கடந்து சென்றன.



அதைப் பார்த்த குடியிருப்புவாசிகள், காட்டு யானைகளை "போ ராஜா போ" என அன்பான வார்த்தைகளைக் கூறி விரட்டினர்.



இதையடுத்து, அந்தக் காட்டு யானைகள் அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்றன. இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். காட்டு யானைகளை கிராம மக்கள் அன்பான வார்த்தைகளால் பேசி விரட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...