தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி - சாம்பியன் பட்டம் வென்ற திருப்பூர் மாணவர்கள்!

ஈரோட்டில் நடைபெற்ற தென்னிந்திய அளவில் நடந்த கராத்தே போட்டியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.



திருப்பூர்: ஈரோட்டில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி நடத்தப்பட்டது. இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஐந்து வயது முதல் 15 வயது வரையான மாணவ - மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்திலிருந்து சுமார் 75க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர்.



கத்தா மற்றும் குமித்தே பிரிவில் 13 தங்கம், 26 வெள்ளி, 39 வெண்கல பதக்கங்களை திருப்பூர் மாணவர்கள் வென்றனர். ஓபன் குமித்தே பிரிவில் மூன்று மிதிவண்டிகளை சிறப்பு பரிசாகவும் வென்றனர்.



தொடர்ந்து, கராத்தே சாம்பியன் சிப் பட்டத்தையும் திருப்பூர் மாணவர்களே கைப்பற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கு திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ செல்வராஜ் வாழ்த்து தெரிவித்தார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...