சூலூரில் கார்கள் நேருக்கு நேர் மோதல் - இரண்டு பெண்கள் பலி

கோவை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் முன்சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலி.


கோவை: சூலூரில் நடந்த கார் விபத்தில் இரண்டு பெண்கள் பலி மற்றும் ஏழு பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் காங்கேயம்பாளையம் பகுதியை அடுத்த ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் தனது மனைவி மற்றும் இருமகளுடன் கோவையை நோக்கிக் காரில் சென்றுள்ளார். அப்போது கோவையிலிருந்து டாக்டர் மோகன் என்பவர் காரில் தனது தாய், தந்தையுடன் தாராபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.



இந்நிலையில் ஜெயராமன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பைத் தாண்டி டாக்டர் மோகன் ஓட்டி சென்ற காரின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு கார்களும் சேதமடைந்தன.



கார்களில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்தனர். அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் டாக்டர் மோகனின் தாய் பிரிசில்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



இதேபோல் ஜெயராமனின் மனைவி அமுதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...