ஊட்டி தாவரவியல் பூங்கா ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் - பராமரிப்புப் பணிகள் முடக்கம்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பூங்கா பராமரிப்பு பணிகள் பாதிக்கபட்டுள்ளன.



நீலகிரி: சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்காக்கள் உள்ளிட்ட 5 அரசு பூங்காக்கள் மற்றும் நஞ்சநாடு, கல்லாறு, பர்லியாறு உள்ளிட்ட 9 அரசுப் பண்ணைகளில் 1200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் 80% பேர் பணி நிரந்தரம் செய்யபடாமலும் தின கூலியாக நாள் ஒன்றுக்கு 425 ரூபாய் மட்டுமே பெற்று பணப்பலன்கள் இன்றி பணியாற்றி வருகின்றனர்.

இதனையடுத்து, 5 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி பண பலன்களை பிடித்தம் செய்ய வேண்டும், பணி மூப்பு அடிப்படையில் ஊக்க தொகை உயர்த்தி வழங்க வேண்டும்,



காலியாக உள்ள இடங்களை தற்காலிக பணியாளராக உள்ள தங்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப நிரப்ப வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு நிதித்துறை ஆணை படி தற்போது உள்ள தொழிலாளர்களை பண்ணை பணியாளர்களை அங்கீகாரிக்க வேண்டும் என்து உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை அரசு தாவரவியல் பூங்கா முன் கடந்த 9-ந்தேதி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆனால், தோட்டக்கலை துறை நிர்வாகம் இதுவரை கோரிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஊழியர்கள், இன்று காலை முதல் தாவரவியல் பூங்காவிற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த போராட்டத்தில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட 5 பூங்காக்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் 9 அரசு பண்ணைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். ஊழியர்களின் இந்தப் போராட்டத்தால் பூங்கா பராமரிப்புப் பணிகள் முடங்கியுள்ளன.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...