பொதுமக்கள் கொண்டுவரும் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிக்க வைத்து போலீசார் சோதனை! - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு

குடியரசு தினம் நெருங்குவதால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனைக்கு பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். தண்ணீர் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிக்க வைத்து போலீசார் சோதனை செய்தனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் பலரும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுக்களை அளிப்பர். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.



அதே சமயம் அசம்பாவிதங்கள் ஏதேனும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார், பொதுமக்களையும் அவர்களது உடைமைகளையும் சோதனை மேற்கொண்ட பிறகே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிப்பர்.



கடந்த வாரம் பொங்கல் பண்டிகை விடுமுறை என்பதால், இன்று அதிக அளவிலான பொதுமக்கள் மனு அளிக்க வந்த வண்ணம் உள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளதை ஒட்டியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மனு அளிக்க வரும் பொதுமக்களின் உடமைகளை வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் கொண்டு சோதனை செய்யப்படுகிறது.

பல்வேறு சமயங்களில் மனு அளிக்க வரும் பொதுமக்களில் சிலர் தண்ணீர் பாட்டில்களில் மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் போன்றவற்றை எடுத்து வந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்கின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் மனு அளிக்க வந்த நபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்றைய தினம் பொதுமக்களிடம் சோதனை மேற்கொள்ளும் போலீசார், பொதுமக்கள் எடுத்து வரும் தண்ணீர் பாட்டிலை சோதனை செய்து அதனை பொதுமக்களே குடித்து காண்பிக்க செய்து பின்னர் உள்ளே செல்ல அனுமதி அளித்தனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...