கோவையில் வீடு புகுந்து கல்லூரி மாணவரை வெட்டிய மர்ம கும்பல் - நள்ளிரவில் பரபரப்பு

கோவை சரவணம்பட்டியில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை சரவணம்பட்டி சிவனந்தாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் சரவணகுமார்(23). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். நேற்று இரவு இவரது குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது இரவு 11 மணியளவில் வீட்டிற்குள் 20 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அவர்கள் சரவணகுமாரிடம் காமராஜபுரத்தை சேர்ந்த ஒரு இளைஞர் குறித்து கேட்டனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை ஆயுதங்களால் அடித்து உடைத்து சூறையாடினர். பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி கல்லூரி மாணவர் சரவணகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு தலை மற்றும் நெற்றியில் வெட்டு காயம் விழுந்தது.

இதனைப் பார்த்து தடுக்க முயன்ற அவரது மாமா பாலசுப்ரமணியத்தையும் அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் வெட்டு காயம் விழுந்தது. பின்னர் அந்த கும்பல் அவர்களை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பலத்த காயம் அடைந்த இருவரையும் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 2 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...