பல்லடம் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டுவதைக் கண்டித்து தர்ணா

பல்லடம் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்.


திருப்பூர்: வடுகபாளையம்புதூர் ஊராட்சியில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் தீ வைத்துக் கொளுத்துவதால் சுவாசக்கோளாறு ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் சல்லடத்தை அடுத்த வடுகபாளையம்புதூர் ஊராட்சி அலுவலகம் அருகே சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில் ஊராட்சி பகுதிகளில் அள்ளப்படும் குப்பைகள் குடியிருப்புக்கு அருகே கொட்டப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, சுவாசக்கோளாறு ஏற்படுவதாகக் கூறி ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் மனு அளித்துள்ளனர்.



ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.



இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பழைய பொள்ளாச்சி சாலை செல்லும் வழியில் பொதுமக்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குப்பைகளை அப்புறப்படுத்தும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...