பல்லடம் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டுவதைக் கண்டித்து தர்ணா

பல்லடம் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்.


திருப்பூர்: வடுகபாளையம்புதூர் ஊராட்சியில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் தீ வைத்துக் கொளுத்துவதால் சுவாசக்கோளாறு ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் சல்லடத்தை அடுத்த வடுகபாளையம்புதூர் ஊராட்சி அலுவலகம் அருகே சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில் ஊராட்சி பகுதிகளில் அள்ளப்படும் குப்பைகள் குடியிருப்புக்கு அருகே கொட்டப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, சுவாசக்கோளாறு ஏற்படுவதாகக் கூறி ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் மனு அளித்துள்ளனர்.



ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.



இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பழைய பொள்ளாச்சி சாலை செல்லும் வழியில் பொதுமக்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குப்பைகளை அப்புறப்படுத்தும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...