கோவை அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவினர் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்


அ.தி.மு.க  பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே தற்போது அதிகாரப்போட்டி நிலவி வருகிறது.

அ.தி.மு.க -வில் ஒரு பிரிவினர் சசிகலாவிற்கும், மற்றொரு பிரிவினர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அ.தி.மு.க  வழக்கறிஞர்கள் பிரிவினர் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக கோவை மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக உயர்ந்தவர் எனவும், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து முதலமைச்சராக பணியாற்ற உறுதுணையாக இருப்போம் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும், அ.தி.மு.க  சட்டமன்ற உறுப்பினர்கள் நெருக்கடியான சூழலில் விடுதிகளில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்களும் விரைவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிப்பார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...