கோவை வால்பாறை அருகே இறந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டெருமை - வனத்துறையினர் ஆய்வு

வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் அருகேயுள்ள வனப்பகுதியில் காட்டெருமை இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, வனத்துறையினர் காட்டெருமையின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதி அருகே சிறிய வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டெருமை, கரடி, மான், யானைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இதனிடையே இந்த வனப்பகுதியில் 4 நாட்களுக்கு முன்பு 2 காட்டெருமைகள் சண்டையிட்டு கொண்டதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் இன்று வனப்பகுதியில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.



அப்போது அருகில் சென்று பார்த்த போது, காட்டெருமை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை கண்ட அவ்வழியே சென்றவர்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர், ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் இறந்த காட்டு எருமையின் உடலில் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



அதில், 4 நாட்களுக்கு முன்பு 2 காட்டெருமைகள் சண்டை போட்டுக் கொண்டதில் ஒரு காட்டெருமைக்கு காயங்கள் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இறந்த காட்டு எருமையின் உடலை வனத்துறை மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...