கேரளாவில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

பாலக்காடு மாவட்டத்தில் ஒருவரை தாக்கி கொன்று விட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறை மருத்துவர்கள் அடங்கிய 75 பேர் கொண்ட குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பத்திரமாக பிடித்தனர்.


கோவை: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள தோணி என்ற மலை கிராமத்தில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இப்பகுதியில் நடை பயிற்சிக்கு சென்ற சிவராமன் என்பவரை யானை தாக்கிக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் விவசாய நிலங்களில் புகுந்த அந்த காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தி உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதனால் அந்த காட்டு யானையை பிடித்து அடர் வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வனத்துறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த காட்டு யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் அந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறை கால்நடை மருத்துவர் அருண் சக்ரியா தலைமையில் 75 பேர் கொண்ட குழு ஈடுபடுத்தப்பட்டது.



காட்டு யானையை வெற்றிகரமாக மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், கும்கி யானை உதவியுடன் காட்டு யானையை லாரியில் ஏற்றி அழைத்து சென்றனர். பிடிபட்ட யானையை அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூண்டில் வைத்து கும்கி யானையாக மாற்ற பயிற்சி கொடுக்க உள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க பட்டதற்கு பிறகு அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...