கேரளாவில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

பாலக்காடு மாவட்டத்தில் ஒருவரை தாக்கி கொன்று விட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறை மருத்துவர்கள் அடங்கிய 75 பேர் கொண்ட குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பத்திரமாக பிடித்தனர்.


கோவை: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள தோணி என்ற மலை கிராமத்தில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இப்பகுதியில் நடை பயிற்சிக்கு சென்ற சிவராமன் என்பவரை யானை தாக்கிக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் விவசாய நிலங்களில் புகுந்த அந்த காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தி உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதனால் அந்த காட்டு யானையை பிடித்து அடர் வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வனத்துறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த காட்டு யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் அந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறை கால்நடை மருத்துவர் அருண் சக்ரியா தலைமையில் 75 பேர் கொண்ட குழு ஈடுபடுத்தப்பட்டது.



காட்டு யானையை வெற்றிகரமாக மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், கும்கி யானை உதவியுடன் காட்டு யானையை லாரியில் ஏற்றி அழைத்து சென்றனர். பிடிபட்ட யானையை அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூண்டில் வைத்து கும்கி யானையாக மாற்ற பயிற்சி கொடுக்க உள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க பட்டதற்கு பிறகு அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...