தாராபுரத்தில் ரேக்ளா பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.! - பார்வையாளர்கள் உற்சாகம்..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ரேக்ளா கிளப் மற்றும் விவசாயிகள் இணைந்து 10ஆண்டாக நடத்திய ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகளால் பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 10வது ஆண்டாக ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. திரு ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி அருகில் இன்று காலை 6.30 அளவில் இந்தப் போட்டி தொடங்கியது.



இந்தப் போட்டியை திரு ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் தாளாளரும் பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.என். வேணுகோபாலு தொடங்கிவைத்தார்.

திமுக மாவட்ட பிரதிநிதி ஆபீஸ் தோட்டம் செல்லமுத்து மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் ரஜினி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.



ரேக்ளா கிளப் மற்றும் விவசாயிகள் சார்பில் 10வது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த ரேக்ளா பந்தயத்தில் தாராபுரம், பழனி, சத்திரப்பட்டி, திருப்பூர், பொள்ளாச்சி, காங்கேயம், சங்கரண்டாம்பாளையம், புளியம்பட்டி, சோமனூர், அன்னூர், சத்தியமங்கலம், என 50க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து போட்டியாளர்கள் வந்து கலந்துகொண்டனர்.



சுமார் 280 ரேக்ளா வண்டிகளில் இரண்டு மாடுகள் பூட்டப்பட்டு 200 மீட்டர் 300 மீட்டர் என இரு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.



ரேக்ளாவில் பங்கேற்ற காளைகள் பந்தய தூரத்தை கடக்க சீறிப்பாய்ந்து சென்றதை சாலையின் இருபுறமும் கூடியிருந்த பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுரசித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...