டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி - திருப்பூர் அணி அசத்தல்

திருப்பூர் முருகம்பாளையம் வயர்ஸ் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க்கில் நடைபெற்ற டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டியில் ஆந்திரா அணியை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றி.


திருப்பூர்: 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் திருப்பூர் அணி, ஆந்திர அணியை வீழ்த்தி கோப்பையைத் தட்டிச் சென்றது.

திருப்பூர் முருகம்பாளையம் வயர்ஸ் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க்கில் திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான டி.எஸ்.சி சேலஞ்சர் ட்ராபிக் கிரிக்கெட் போட்டி கடந்த 14ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பூனே உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து எட்டு அணிகள் கலந்து கொண்டன. டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபிக் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் திருப்பூர் மற்றும் ஆந்திர அணி மோதின. இதில் முதலில் விளையாடிய ஆந்திரா அணி 133 ரன்கள் எடுத்தது.



134 என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் அணியினர் வெற்றி இலக்கை எட்டி போட்டியில் வெற்றி பெற்றனர்.



இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், இந்தியன் கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவில் உள்ள சரத் ஸ்ரீதர் , தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் பழனி உள்ளிட்டர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கும், கலந்து கொண்ட மற்ற அணியினருக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...