நீலகிரி மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பு பதவிகளுக்கு நேர்க்காணல்

நீலகிரி மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர்களுக்கான நேர்காணலில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு, நேர்க்காணல் செய்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்ட திமுக ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு மாநில செயலாளரும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அனைவரையும் வரவேற்றார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை தலைவரும் வனத்துறை அமைச்சருமான மதிவேந்தன், இணை செயலாளர்கள் வி.பி.ராஜன் திப்பம்பட்டி ஆறுசாமி, கொடநாடு பொன்தோஸ் ஆகியோர் விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.



அப்போது, இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்திருந்த உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதில் மாவட்ட திமுக துணை செயலாளர் ரவிகுமார், பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தஃபா, இளங்கோவன், உதகை நகர செயலாளர் ஜார்ஜ் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...