சூலூரில் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த வடமாநில வாலிபர் கைது

சூலூரில் கைப்பையில் கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனைக்குக் கொண்டு சென்ற வடமாநிலத்தவரிடம் இருந்து 1.5கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்.


கோவை: சூலூர் சுல்தான்பேட்டை அருகே கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்கலேட் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் இடையபாளையம் பிரிவு பகுதியில் நின்று கொண்டிருந்த வடமாநில வாலிபரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவர் வைத்திருந்த கைப்பையைச் சோதனை செய்தனர். அதில் மஞ்சள் நிறத்தில் சாக்லேட்டுகள் இருந்துள்ளது. அந்தச் சாக்லேட்டை பிரித்துப் பார்த்தபோது அது கஞ்சா சாக்லேட் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனை அடுத்து அந்த நபரை சுல்தான்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில், அவர் பீகார் மாநிலம் கங்குலி கிராமத்தைச் சேர்ந்த பப்லு குமார் என்பது தெரியவந்தது. மேலும் பீகார் மாநிலத்திலிருந்து ரயில் மூலம் கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தி வந்து இங்குள்ள வட மாநில நபர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்வதற்காக எடுத்து வந்ததும் தெரிய வந்தது.



அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடமிருந்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...