தாராபுரம் நகராட்சி சார்பில் மகளிர் உதவிக்குழுவுக்கு நிதி வழங்கல்

தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதியில் மழை நீர் வடிகால்கள், புதிய கல்வெட்டு அமைக்கும் பணிகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் ஆய்வு.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் மல்லிகா பெண்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 2ஆவது வார்டு பகுதியில் புதிய மழை நீர் வடிகால்கள், புதிய கல்வெட்டு அமைக்கும் பணிகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் ஆய்வு செய்தார்.



பின்பு நகராட்சியின் சார்பாக மல்லிகா பெண்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இந்த நிகழ்வில், நகர மன்ற தலைவர் பொறியாளர் கு.பாப்புகண்ணன், நகராட்சி உதவிப் பொறியாளர் காளீஸ்வரி, நகராட்சி சமுதாய அமைப்பாளர் நந்தினி பிரியா, சியாமளா, 2ஆவது வார்டு செயலாளர் மோகன்ராஜ், வார்டு அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வார்டு பொருளாளர் ஜெயராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் சரத், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில் பாண்டி, நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் லட்சுமணன், வட்ட கழக இன்னாள் முன்னாள் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...