உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு

உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தைப் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்ய விவசாயிகள் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு.


திருப்பூர்: உடுமலையில் 48 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தைப் பொள்ளாச்சிக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதால் தொழில்துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 48 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் உடுமலை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தைப் பொள்ளாச்சிக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதால் தொழில்துறையினர் விவசாயிகள் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது, உடுமலை பகுதியில் நூல் மற்றும் காகித ஆலைகள் எனத் தொழில் வளர்ச்சிக்கும், விவசாயம் மற்றும் நகர வளர்ச்சிக்கும் பெரிதும் துணையாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அமைந்தது.

அப்போது திமுகவில் சாதிக் பாட்ஷா, கண்ணப்பன் என்ற இரு அமைச்சர்கள் நடத்திய பெரும் போராட்டத்திற்குப் பின் உடுமலையில் மின் பகிர்மான வட்டம் உருவாக்கப்பட்டு அன்று முதல் தற்போது வரை செயல்பட்டு வருகின்றது.

மின் இணைப்பு வழங்குதல், புதிய திட்டங்களை உருவாக்குதல், மின் கம்பம் தயாரிப்பு, மின் மீட்டர்கள், டிரான்ஸ்பார்ம்கள் பராமரிப்பு, பழுது நீக்குதல் என ஏராளமான பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

உடுமலை மின் பகிர்மான வட்டத்தில் 49 பிரிவு அலுவலகங்கள் இருந்தாலும், உடுமலை, மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, தேவனூர்புதூர் என உடுமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலேயே அதிக மின் இணைப்புகள் உள்ளன.

தற்போது பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள பிரிவு அலுவலகங்களைப் பிரித்து ஒரு செயற்பொறியாளர் அலுவலகம் கூடுதலாக உருவாக்கவும், கூடுதலாகப் பிரிவு அலுவலகங்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் உடுமலையில் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் இருப்பது சரியானதாக இருக்கும்.



ஆனால் தற்போது எந்த விதமான காரணமும் இல்லாமல், சொந்த கட்டிடத்தில் செயல்படும் ஒரு அலுவலகத்தை வாடகை கட்டிடத்திற்கு மாற்றுவது ஏன். உடுமலையிலிருந்து மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் மாற்றப்பட்டால் மின்துறை சார்ந்த வளர்ச்சி பாதிப்பதோடு மின் இணைப்புகள் வழங்குதல் மற்றும் அதிகாரிகள் மீதான புகார்கள் என அனைத்து பணிகளுக்கும் பொள்ளாச்சிக்குச் செல்ல வேண்டும் நிலை ஏற்படும்.

ஆகையால் உடுமலை மின் பகிர்மான வட்டத்தைப் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.

Newsletter

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...