உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு

உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தைப் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்ய விவசாயிகள் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு.


திருப்பூர்: உடுமலையில் 48 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தைப் பொள்ளாச்சிக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதால் தொழில்துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 48 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் உடுமலை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தைப் பொள்ளாச்சிக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதால் தொழில்துறையினர் விவசாயிகள் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது, உடுமலை பகுதியில் நூல் மற்றும் காகித ஆலைகள் எனத் தொழில் வளர்ச்சிக்கும், விவசாயம் மற்றும் நகர வளர்ச்சிக்கும் பெரிதும் துணையாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அமைந்தது.

அப்போது திமுகவில் சாதிக் பாட்ஷா, கண்ணப்பன் என்ற இரு அமைச்சர்கள் நடத்திய பெரும் போராட்டத்திற்குப் பின் உடுமலையில் மின் பகிர்மான வட்டம் உருவாக்கப்பட்டு அன்று முதல் தற்போது வரை செயல்பட்டு வருகின்றது.

மின் இணைப்பு வழங்குதல், புதிய திட்டங்களை உருவாக்குதல், மின் கம்பம் தயாரிப்பு, மின் மீட்டர்கள், டிரான்ஸ்பார்ம்கள் பராமரிப்பு, பழுது நீக்குதல் என ஏராளமான பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

உடுமலை மின் பகிர்மான வட்டத்தில் 49 பிரிவு அலுவலகங்கள் இருந்தாலும், உடுமலை, மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, தேவனூர்புதூர் என உடுமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலேயே அதிக மின் இணைப்புகள் உள்ளன.

தற்போது பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள பிரிவு அலுவலகங்களைப் பிரித்து ஒரு செயற்பொறியாளர் அலுவலகம் கூடுதலாக உருவாக்கவும், கூடுதலாகப் பிரிவு அலுவலகங்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் உடுமலையில் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் இருப்பது சரியானதாக இருக்கும்.



ஆனால் தற்போது எந்த விதமான காரணமும் இல்லாமல், சொந்த கட்டிடத்தில் செயல்படும் ஒரு அலுவலகத்தை வாடகை கட்டிடத்திற்கு மாற்றுவது ஏன். உடுமலையிலிருந்து மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் மாற்றப்பட்டால் மின்துறை சார்ந்த வளர்ச்சி பாதிப்பதோடு மின் இணைப்புகள் வழங்குதல் மற்றும் அதிகாரிகள் மீதான புகார்கள் என அனைத்து பணிகளுக்கும் பொள்ளாச்சிக்குச் செல்ல வேண்டும் நிலை ஏற்படும்.

ஆகையால் உடுமலை மின் பகிர்மான வட்டத்தைப் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.

Newsletter

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...