கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் பணம் கையாடல் வழக்கு - கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

கோவை பொதுப்பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ரூ.9 ஆயிரம் கையாடல் செய்த கூட்டுறவுச் சங்க எழுத்தருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு.


கோவை: வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வந்த பொதுப்பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் பணம் கையாடல் செய்த வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வந்த பொதுப்பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடந்த 1993 - 1994 காலகட்டத்தில் செயலராக பணியாற்றி வந்த நாகராஜ், எழுத்தர் விஜயகுமார் உள்ளிட்ட மூன்று பேர் சங்க உறுப்பினர்கள் செலுத்திய தொகையில் ரூ.9 ஆயிரம் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததது.

இது குறித்து கூட்டுறவுச் சங்க துணைப்பதிவாளர் மகேந்திரன் வணிக குற்றப்பிரவு போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் கடந்த 1995இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2001இல் விசாரணை துவங்கியது. இந்த வழக்கில் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.

மேலும் கூட்டுறவு செயலாளர் நாகராஜ், துணைத் தலைவர் சுந்தரம், தலைவர் மோகன்தாஸ் ஆகியோர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோவை ஜே.எம்-4 நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இதில் அரசு தரப்பில் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட எழுத்தர் விஜயகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதியரசர் சரவணபாபு உத்தரவிட்டார். மேலும் விஜயகுமார் மேல்முறையீடு செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...