திருப்பூர் குண்டடம் அருகே இருசக்கர வாகனம் மீது கார்‌ மோதி விபத்து - தொழிலாளி பலி!

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், தேங்காய் வெட்டும் தொழிலாளி உயிரிழந்தார்.


திருப்பூர்: குண்டடத்தை அடுத்துள்ள இடையபட்டியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 54). இவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று தாராபுரம்-கோவை ரோட்டில் குண்டடத்தை அடுத்துள்ள மேட்டுக்கடை பஸ் நிறுத்தம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, அந்த வழியாக கோவை நோக்கிச் சென்ற கார், எதிர்பாராதவிமாக சண்முகதின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சண்முகத்தின் ஒரு கால் துண்டாகியது. மேலும் அவர் காருடன் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கீழே விழுந்தார்.

படுகாயமடைந்த சண்முகத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...