துடியலூரில் மதுபானங்கள் விற்ற இருவர் கைது!

துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியம்பாளையம் மற்றும் கே.என்.ஜி.புதூர் பகுதிகளில் அரசு மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 2 நபர்கள் கைது.


கோவை: துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபானங்களைக் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 40 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் அரசு மதுபானங்கள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்குச் சென்ற துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குரு சந்திர வடிவேல், அங்கு மதுபானங்களை விற்றுக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரைக் கைது செய்து அவரிடம் இருந்து 22 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தார்.

இதேபோல் கே.என்.ஜி.புதூர் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்பவரையும் மது விற்றதாகக் கைது செய்தார். அவரிடம் இருந்து 18 பாட்டில் மது பறிமுதல் செய்து இருவரைக் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...