துடியலூரில் மதுபானங்கள் விற்ற இருவர் கைது!

துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியம்பாளையம் மற்றும் கே.என்.ஜி.புதூர் பகுதிகளில் அரசு மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 2 நபர்கள் கைது.


கோவை: துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபானங்களைக் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 40 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் அரசு மதுபானங்கள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்குச் சென்ற துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குரு சந்திர வடிவேல், அங்கு மதுபானங்களை விற்றுக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரைக் கைது செய்து அவரிடம் இருந்து 22 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தார்.

இதேபோல் கே.என்.ஜி.புதூர் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்பவரையும் மது விற்றதாகக் கைது செய்தார். அவரிடம் இருந்து 18 பாட்டில் மது பறிமுதல் செய்து இருவரைக் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...