துடியலூரில் மதுபானங்கள் விற்ற இருவர் கைது!

துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியம்பாளையம் மற்றும் கே.என்.ஜி.புதூர் பகுதிகளில் அரசு மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 2 நபர்கள் கைது.


கோவை: துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபானங்களைக் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 40 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் அரசு மதுபானங்கள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்குச் சென்ற துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குரு சந்திர வடிவேல், அங்கு மதுபானங்களை விற்றுக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரைக் கைது செய்து அவரிடம் இருந்து 22 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தார்.

இதேபோல் கே.என்.ஜி.புதூர் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்பவரையும் மது விற்றதாகக் கைது செய்தார். அவரிடம் இருந்து 18 பாட்டில் மது பறிமுதல் செய்து இருவரைக் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...