'தமிழ்நாட்டில் பாஜகவுக்குப் பொதுமக்கள் ஆதரவு..!' - தாராபுரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் பேட்டி

தமிழ்நாட்டில் பாஜகவுக்குப் பொதுமக்கள் முழுமையான ஆதரவு அளித்து வருகின்றனர் என்று பாஜக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார் பேச்சு.


திருப்பூர்: தாராபுரம் அருகே மூலனூர் தெற்கு ஒன்றிய கிராமப்புறங்களில் பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு சார்பில் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் மூலனூர் தெற்கு ஒன்றியம் பொன்னிவாடி ஊராட்சியில் பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு சார்பில் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கொடியேற்று விழா மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமையில் நடைபெற்றது.



இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி கொடியேற்றி வைத்தார். மாநிலத் துணைத் தலைவர் ஆற்றல் அசோக் குமார் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இதேபோல் பகவான் கோவில், அத்தி மரத்துப்புதூர், பொன்னிவாடி, எல்லப்பம்பாளையம் உள்ளிட்ட 32 இடங்களில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து பொன்னிவாடி கிராமத்தில் பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய மாநில துணைத்தலைவர் அசோக்குமார், தமிழகத்தில் பாஜக பொதுமக்கள் முழுமையாக ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

மக்களின் பிரச்னைகளை ஆட்சியாளர்களிடம் எடுத்துக் கூறி மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் பாஜக முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

கிராமப்புற மக்களுக்குப் பிரதமர் மோடியின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், கிராமப்புறங்களில் பாஜக பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில், கொடியேற்றி வைத்து பாஜக தொண்டர்கள் மக்கள் பணியாற்றிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...