'தமிழ்நாட்டில் பாஜகவுக்குப் பொதுமக்கள் ஆதரவு..!' - தாராபுரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் பேட்டி

தமிழ்நாட்டில் பாஜகவுக்குப் பொதுமக்கள் முழுமையான ஆதரவு அளித்து வருகின்றனர் என்று பாஜக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார் பேச்சு.


திருப்பூர்: தாராபுரம் அருகே மூலனூர் தெற்கு ஒன்றிய கிராமப்புறங்களில் பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு சார்பில் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் மூலனூர் தெற்கு ஒன்றியம் பொன்னிவாடி ஊராட்சியில் பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு சார்பில் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கொடியேற்று விழா மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமையில் நடைபெற்றது.



இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி கொடியேற்றி வைத்தார். மாநிலத் துணைத் தலைவர் ஆற்றல் அசோக் குமார் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இதேபோல் பகவான் கோவில், அத்தி மரத்துப்புதூர், பொன்னிவாடி, எல்லப்பம்பாளையம் உள்ளிட்ட 32 இடங்களில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து பொன்னிவாடி கிராமத்தில் பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய மாநில துணைத்தலைவர் அசோக்குமார், தமிழகத்தில் பாஜக பொதுமக்கள் முழுமையாக ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

மக்களின் பிரச்னைகளை ஆட்சியாளர்களிடம் எடுத்துக் கூறி மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் பாஜக முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

கிராமப்புற மக்களுக்குப் பிரதமர் மோடியின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், கிராமப்புறங்களில் பாஜக பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில், கொடியேற்றி வைத்து பாஜக தொண்டர்கள் மக்கள் பணியாற்றிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...