மேட்டுப்பாளையத்தில் இந்தியா - ரஷ்ய கலாச்சார நிகழ்ச்சி -‘ரஞ்சிதமே’ பாடலுக்கு ரஷ்யர்கள் நடனம்!

மேட்டுப்பாளையம் அருகே தனியார் பள்ளியில் பள்ளியில் ரஷ்யா - இந்தியா நல்லுறவு கலாச்சார நடன நிகழ்ச்சியில் ரஷ்ய நடன குழுவினர், ரஞ்சிதமே பாடலுக்கு ஆடிய குத்தாட்டம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் இந்தியா - ரஷ்யா நல்லுறவுக்கான கலாச்சார நடன நிகழ்ச்சி நடைபெற்றது.



பள்ளி மாணவர்களுக்கு ரஷ்ய நாட்டின் கலாச்சாரம், நடனம் குறித்து அறிந்துகொள்ள நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ரஷ்யாவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று தங்களது நாட்டின் பல்வேறு கலாச்சார நாட்டிய நடனங்களை அரங்கேற்றி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



மேலும் இந்த நிகழ்ச்சியில் பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படத்தில் ஹிட் அடித்த குத்து பாடலான ரஞ்சிதமே பாடலுக்கு ரஷ்யா நாட்டு கலைஞர்கள் தமிழ் பெண்கள் அணியும் பாவாடை தாவணி அணிந்து, குத்தாட்டம் போட்டனர்.

ரஷ்ய குழுவினரின் இந்த நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் மாணவர்கள், கரகோஷங்களை எழுப்பி கலைஞர்களை உற்சாகப்படுத்தினர்.

இதுகுறித்து கலாச்சார குழுவின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தங்கப்பன் பேசுகையில், "இந்தியா மற்றும் ரஷ்ய நாட்டு கலாச்சாரங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக 20 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இம்மாத இறுதி வரை ரஷ்ய கலாச்சார நடன நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது" என்றார்.



முன்னதாக ரஷ்ய கலைஞர்களுக்கு பள்ளி நிர்வாக அறங்காவலர் மோகன்தாஸ், மணிமேகலை மோகன்தாஸ் ஆகியோர், பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...