உடுமலை கச்சேரி வீதியில் வாகனநெரிசல் - அவசர ஊர்திகள் ஊர்ந்து செல்லும் அவலம்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கச்சேரி வீதியில் நாளுக்குநாள் வாகன நெரிசல் அதிகரித்துவருகிறது. இதை சீர்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை கச்சேரி வீதியில் நீதிமன்றம், தாலுக்கா அலுவலகம், சார்ப்பதிவாளர் அலுவலகம், வங்கிகள் என முக்கியமான அரசு அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன. இதனால், அந்த வீதியில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும், இப்பகுதியில் அரசு மருத்துவமனையும் உள்ள காரணத்தால், அவசர ஊர்திகளும் இந்தக் கச்சேரி வீதியையே பயன்படுத்தி வருகின்றன.



இந்த நிலையில், கச்சேரி வீதியில் உணவகத்திற்கும் வருபவர்களும், வங்கிகளுக்கு வருபவர்களும் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால், அவசர ஊர்திகள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இந்த சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல்துறையினர், கச்சேரி வீதி பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...