வேங்கைவயல் விவகாரம் - உதகையில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக உதகையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.


கோவை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள உயர்மட்ட குடிநீர் தொட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சில சமூகவிரோதிகள் மனித மலத்தை கலந்தனர். இந்த சம்வபவம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 5-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.



இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றபட்டுள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் சார்பாக குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தபட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மாவட்ட தலைவர் சகாதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...