கோவை மலுமிச்சம்பட்டியில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மலுமிச்சம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊதுகுழலாகவும், மக்கள் விரோத போக்கை கடைபிடிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டி பகுதியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களை கிடப்பில் போடுவதாகவும், ஆர்.எஸ் எஸ் அமைப்பின் ஊதுகுழலாகவும், மக்கள் விரோத போக்கை தமிழ்நாடு ஆளுநர் கடைப்பிடித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.



காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மதுக்கரை பாலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காளீஸ்வரன், ஜி.ஏ.கண்ணன், ஆர்.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் அவரை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கு.பே.துரை, புவனேஸ்வரி, நஞ்சப்பன், முருகானந்தம், உதயகுமார் உள்ளிட்ட வட்டார தலைவர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...