ஆன்லைன் ரம்மி விவகாரம் - கோவையில் ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கும் கோப்பில் கையெழுத்திடாத ஆளுநரைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவருவதாகக்கூறி, அந்த விளையாட்டிற்கு கடும் எதிர்ப்புகள் வலுத்துவருகிறது. இந்த விளையாட்டிற்கு அரசு தடை விதிக்க வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்த விளையாட்டிற்கு தடை விதிக்க வகை செய்யும் கோப்பில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இதுவரை கையெழுத்திடவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.



அந்த வகையில், கோவை காந்திபார்க் பகுதியில் கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்டத் தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஆன்லைன் ரம்மி தடைக்கு கையெழுத்திட வேண்டும் அல்லது மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



சீட்டுக்கட்டு விளையாட்டில் உள்ள அட்டைகளைபோல் மாதிரி பதாகைகளை ஏந்தியவாறு காங்கிரஸ் கட்சியின் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...