உடுமலையில் சலகெருது ஆட்டத்தில் வீரர்களை பந்தாடிய காளை - வைரல் வீடியோ!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆல்கொண்ட மால கோயிலில் பாரம்பரிய சலக்கெருது ஆட்டம் நடைபெற்றது. அப்போது, இளங்காளை ஒன்று வீரர்களை விரட்டி விரட்டி பந்தாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


திருப்பூர்: பொங்கல் பண்டிகை வந்துவிட்டால் திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் களைகட்டும் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சலக்கெருது (சலங்கை எருது ஆட்டம்) ஆட்டம்.



கால்களில் சலங்கை கட்டிய இளைஞர்கள், கையில் நீண்ட கம்புகளை வைத்து, உருமி இசைக்கேற்ப காளையின் முன்னே நடனமாடி, காளைகளையும் ஆட வைப்பதுதான் சலக்கெருது ஆட்டம். திருப்பூர் மாவட்டத்தின் பல கிராமங்களிலும் பொங்கல் பண்டிகையின் போது இந்த நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டுவருகிறது.

அந்த வகையில், உடுமலை அருகே உள்ள ஆல் கொண்ட மால கோயிலிலும் சலக்கெருது ஆட்டம் நடைபெற்றது.



சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சார்பில் இந்த பாரம்பரிய சலகெருது ஆட்டம் நடத்தப்பட்டது.



அப்போது, சலகெருது ஆட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட இளஞ்காளை ஒன்று, வீரர்கள் மற்றும் கூட்டத்தில் இருந்தவர்களை துரத்தி துரத்தி பந்தாட முயன்றது. இந்தக் காட்சியானது, "கொம்பன்" பட பாடல் பின்னணியுடன் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...