உடுமலையில் சலகெருது ஆட்டத்தில் வீரர்களை பந்தாடிய காளை - வைரல் வீடியோ!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆல்கொண்ட மால கோயிலில் பாரம்பரிய சலக்கெருது ஆட்டம் நடைபெற்றது. அப்போது, இளங்காளை ஒன்று வீரர்களை விரட்டி விரட்டி பந்தாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


திருப்பூர்: பொங்கல் பண்டிகை வந்துவிட்டால் திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் களைகட்டும் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சலக்கெருது (சலங்கை எருது ஆட்டம்) ஆட்டம்.



கால்களில் சலங்கை கட்டிய இளைஞர்கள், கையில் நீண்ட கம்புகளை வைத்து, உருமி இசைக்கேற்ப காளையின் முன்னே நடனமாடி, காளைகளையும் ஆட வைப்பதுதான் சலக்கெருது ஆட்டம். திருப்பூர் மாவட்டத்தின் பல கிராமங்களிலும் பொங்கல் பண்டிகையின் போது இந்த நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டுவருகிறது.

அந்த வகையில், உடுமலை அருகே உள்ள ஆல் கொண்ட மால கோயிலிலும் சலக்கெருது ஆட்டம் நடைபெற்றது.



சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சார்பில் இந்த பாரம்பரிய சலகெருது ஆட்டம் நடத்தப்பட்டது.



அப்போது, சலகெருது ஆட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட இளஞ்காளை ஒன்று, வீரர்கள் மற்றும் கூட்டத்தில் இருந்தவர்களை துரத்தி துரத்தி பந்தாட முயன்றது. இந்தக் காட்சியானது, "கொம்பன்" பட பாடல் பின்னணியுடன் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...